Wednesday, July 21, 2010

RTI activist killed for campaign against BJP MP, says family

http://www.ndtv.com/article/india/rti-activist-killed-for-campaign-against-bjp-mp-says-family-38770

Ahmedabad: The family of Amit Jethwa believes that the Right to Information activist was killed in Gujarat because he was fighting illegal mining, which allegedly involves several politicians.

Jethwa was shot on Wednesday night as he was leaving his lawyer's office, opposite the Gujarat High Court which is a high-security area. The two men who fired a round in his neck escaped into the night.

A gun and cartridges left behind by them have been sent to a forensic lab.

Jethwa's family blames BJP MP Dinubhai Solanki for the murder. Over the last two years, Jethwa filed nearly six RTI applications, asking for information on Solanki's possible involvement in illegal mining. "We have been receiving threats and we are sure that Dinubhai Solanki and his family members were involved in the cold blooded murder," says Jethwa's father, Bikhubhai.

Solanki was not available for comment. The BJP says this is a criminal case, and not a political one.

In atleast a dozen RTI petitions filed in the last one year, Jethwa said that Dinubhai Solkanki and his relative operated limestone quarries and stone-crushers on government land just outside the Gir sanctuary for lions - meant to be a protected forest area. Jethwa was so committed to exposing the nexus between politicians and the mining mafia in Gujarat that he left his village a few years ago for Ahmedabad.

Jethwa's family believes that his campaign had picked up enough to make his opponents uncomfortable - based on the information gathered through his RTI applications, he went to the Gujarat High Court two months ago with a Public Interest Litigation (PIL) alleging large scale illegal mining in and around Gir sanctuary by Solanki and his family. Last week, the court issued notices to the state government and union environment ministry to respond.

Jethwa's murder, say other RTI activists, proves that those trying to fight corruption are at grave risk. "We are feeling highly insecure...if this is how activist are killed how can we feel safe" asks Amarsinh Rathwa, who is also an RTI activist operating in Gujarat.

Read more at: http://www.ndtv.com/article/india/rti-activist-killed-for-campaign-against-bjp-mp-says-family-38770?cp

Monday, July 5, 2010

RSS யிடம் இருந்து பாதுகாப்பு கேட்கும் மோகன் பகவத்

பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றமும், மாநில அரசும் போட்டி போட்டிக் கொண்டு பாதுகாப்பு அளிப்பதை கண்டுள்ளீர்களா? ஆம்! ஆர்.எஸ்.எஸ்ஸை தலைமையாக கொண்டு பல ஹிந்துத்துவ தீவிரவாதிகள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றதை நாம் அறிவோம். மலேகோன், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மார்கோவா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் என பல குண்டுவெடிப்புகள் இவ்வமைப்புகளால் நிகழ்த்தப்பட்டு,நீதிவிசாரனைகளில் இவ்வமைப்புகளின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும், எங்கு நம் வேடம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், கைது செய்யப்பட்ட அத்தொண்டர்களை கழட்டிவிடும் முயற்சியில் அவ்வமைப்புகள் களமிறங்கின. அதன்படி, இக்குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கும் தங்கள் இயக்கங்களுக்கும் சம்மந்தமே கிடையாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை என்றும் அவ்வமைப்புகள் கைகழுவின. நம் தீவிரவாத இயக்கங்களை தடைசெய்துவிடுவார்கள் என்று பயந்து, அத்தொண்டர்களுக்கு எந்த விதமான ஆதரவோ அல்லது உதவியோ நாங்கள் அளிக்கமாட்டோம் என்றும் இவ்வமைப்புகள் சூளுரைத்தனர்.

இச்செய்தியை அறிந்த தொண்டர் பயங்கரவாதிகள் கொதிப்படைந்தனர். தங்கள் வாழ்கையை சீரழித்த தலைவர்களை கொலைச் செய்யப்போவதாகவும் தொண்டர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.தம் சக பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதைக் கண்டு பயந்து போன பயங்கரவாத தலைவன், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகினான்.

மனுவை விசாரித்த நீதிமன்றமோ, மாநில அரசை இது தொடர்பாக கேள்வி கேட்க, நீதிமன்றமும், மும்பை மாநில அரசும் அப்பயங்கரவாதத் தலைவனுக்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். சிறையில் இருக்கும் தன் சக பயங்கரவாதிகளினால் பயங்கரவாத தலைவனுக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஒட்டுமொத்த பயங்கரவாத கும்பல்களின் மூலம் நம் சமுதாயத்திற்கு ஏற்படும்நிலை?

பயங்கரவாதிகள் மனுதாக்கல் செய்தால் ஓரிரு நாட்களில் விசாரித்து தீர்வுகாணும் நீதிமன்றமும், மாநில மத்திய அரசுகளும், சாதாரண மக்களின் குறைகளைத் தீர்க்க காலம் தாழ்த்துவது ஏனோ? ஊழல் கறை படிந்த அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு அழிக்கும் வழக்கம் மாறி, இன்று பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவது! நம் இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு இது தான் காரணமோ என்னவோ? கடைசி வரை அந்த தீவிரவாதியின் பெயரையே சொல்லவே இல்லையே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. ஆம்! தனக்கு தன் தொண்டர் சகாக்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டது ஆர்.எஸ்.எஸ் தலைவர் 'மோகன் பகவத்' தான்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள்.

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மூத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளது. 9 பேர் பலியாக காரணமாயிருந்த இந்த குண்டு வெடிப்பு பற்றிய சதித்திட்டம் இவர்களுக்கு முன்கூட்டியே அறிந்திருக்கூடும் எனவும், தாக்குதலுக்கு பிறகு கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

சிபிஐ 10 லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்திருந்த இரண்டு ஹிந்துத்துவ தீவிரவாதிகளான ராம்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு 2007, மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கு 2008 ஆகிய வழக்குகளிலும் தேடப்படுகின்றனர். ஒரே அமைப்பை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகளே இந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாயிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

உ.பி யிலிருந்து அஷோக் பெரி, கான்பூரிலிருந்து அஷோக் வர்ஷினி (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) மேலும் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) ஆகியோர் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பெரி, வர்ஷினி கொடுத்த தகவலின்படி குண்டுவெடிப்பு பற்றி இவர்களுக்கு முங்கூட்டியே தெரியும் என்றும் சதிகாரர்களுக்கு அடைக்களம் தந்திருப்பதும் தெரிகிறது.

குப்தா மற்றும் ஷர்மா ஆகியோருக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெஃப்டினண்ட் ப்ரசாத் புரொஹித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை குப்தா, ஷர்மா, கல்சங்கரா, டாங்கே மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பே செகந்தராபாத்தில் தங்கி நோட்டமிட்டு ஜோஷி, கல்சங்கரா, டாங்கேவுக்கு தகவல் தந்ததாகவும் இவர்கள் 3 நாட்களுக்கு முன் அங்கு வந்து 18ஆம் தேதியன்று பள்ளிக்குள் சென்று குண்டை வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஜோஷி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது

கொல்கத்தாவில் 5000 துப்பாக்கித் தோட்டக்களை வைத்திருந்தது தொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தோட்டாக்கள் அனைத்தும் இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை ஷோபா பஜார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேகமாக வந்த காரை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடித்தார். இருப்பினும், அந்த காரில் பயணம் செய்த திலிப் மிஷ்ரா, ராஜேஷ் குமார் சர்மா மற்றும் ராம் பர்வேஷ் பிரசாத் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.

இந்நிலையில், காரை பரிசோதித்ததில் அதில் 5000 துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மிஷ்ரா உள்ளிட்ட மூவரும் மத்திய கொல்கத்தா பகுதியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஷ் குமார் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு துப்பாக்கி விற்பனையாளர். இந்த தோட்டாக்கள் அனைத்தும், பூனாவின் ஹிர்கா பகுதியில் உள்ள இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்காக இந்திய ஆயூத தொழிற்சாலையில் தாயரிக்கபட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.