Thursday, May 27, 2010

ஊனமுற்ற முஸ்லிம் இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற உ.பி.போலீஸ்- சத்தியபிரமாணம் தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் முஹம்மது சலீம். இவருக்கு கடந்த 2009 நவம்பர் 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த சாலைவிபத்தில் உடலின் வலது பகுதி முற்றிலுமாக செயலிழந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி தனது சகோதரர்கள் அலீம் மற்றும் சமாயிதீன் ஆகியோர் பைக்கில் சலீமை அழைத்துக் கொண்டு உ.பி.மாநிலம் மதுராவில் உள்ள ஹரிபன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வழியில் வைத்து இவர்களை மறித்த உ.பி.போலீஸ் அவர்களிடம் ட்ரைவிங் லைசன்ஸ் கேட்டுள்ளது. அப்பொழுது அலீமும் சமாய்தீனும் லைசன்ஸை ராஜஸ்தானிலிலுள்ள வீட்டில் விட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு போலீசார் சலீமை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டு லைசன்ஸை கொண்டு வந்துவிட்டு சலீமை மீட்டுச் செல்லுங்கள் எனக்கூறியுள்ளனர்.

இதனால் லைசன்ஸை எடுக்க மீண்டும் இவர்கள் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்ததும் ஃபர்ஹான் பகுதி போலீசாரால் சலீம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்து பதறிப்போயுள்ளார்.

சலீம் காரைத் திருட முயன்றதாகவும், அவருடன் வேறு சில குற்றவாளிகள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பஞ்சாயத்து பிரதான்கள் 20 பேர் சலீமின் உடலைக் கேட்டபொழுது கொடுக்க மறுத்துள்ளனர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் மோசடிச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சலீமின் தந்தை மனுத்தாக்கல் செய்ததையடுத்து சுப்ரீம் கோர்ட் சலீமின் உடலை ஒப்படைக்கவும் இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக சத்தியபிரமாணம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

செய்தி:Zee news

பாலைவனத் தூது

உடனடியாக தூக்கிலிடுங்கள் என்று அஃப்சல் குரு கோரவில்லை

புதுடெல்லி:தன்னை நீண்ட நாட்கள் சிறையிலடைத்திருப்பதை விட, முடிந்தவரை விரைவில் தூக்கிலிடவேண்டுமென்று பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு சுப்ரீம் கோர்ட்டில் கோரியுள்ளார்; என்ற செய்தி தவறானது என அரசியல் சிறைக்கைதிகளின் விடுதலைக்கான அமைப்பான கமிட்டி வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியுள்ளது.

தனது விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டுமென்றுதான் அஃப்சல் குரு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

ஆனால் உடனடியாக தன்னை தூக்கிலிடவேண்டுமென்று அஃப்சல் குரு கோரியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அஃப்சலுக்கு நீதியான விசாரணை கிடைக்கவில்லை.மேலும் அஃப்சல் குருவுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை என சுப்ரீம் கோர்ட்டே தெளிவுப்படுத்தியுள்ளது என கமிட்டி தலைவர் குருசரண் சிங், பொதுச்செயலாளர் அமீத் பட்டாச்சார்யா, செயல் தலைவர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, பொதுமக்கள் தொடர்பு செயலாளர் ரோணா வில்சன் ஆகியோர் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

http://paalaivanathoothu.blogspot.com

Wednesday, May 26, 2010

புனே குண்டுவெடிப்பு:மத்திய அரசிடம் தவறான தகவலை அளித்த ஏ.டி.எஸ்

நீதி மன்றத்தில் ரிமாண்ட் எடுக்கும் போது புனே குண்டு வெடிப்புக்காக அல்லாமல் வேறு காரணத்திற்காக எமுத்துள்ளார்கள்

http://www.ptinews.com/news/667599_Did-Maha-ATS-mislead-Centre-on-Samad-Bhatkal-

STAFF WRITER 17:32 HRS IST
Mumbai, May 25 (PTI) Maharashtra's Anti Terrorism Squad (ATS) may have jumped the gun by informing the Centre about possible involvement of Abdul Samad Bhatkal in the German Bakery blast in Pune if its action today to seek his remand only in a 2009 arms case is an indication.

The remand application submitted by ATS before Mazgaon Metropolitan Magistrate sought remand of Samad in connection with the arms seizure of August 2009 in which three persons were arrested from south Mumbai for possession of illegal firearms.

The ATS had claimed that the weapons were supplied by Samad following which the magistrate remanded him to police custody till June one.

Incidentally, Union Home Minister P Chidambaram issued a statement in New Delhi complimenting the ATS Maharashtra for identifying Samad as prime accused in the Pune blasts in February this year that claimed 17 lives

Tuesday, May 18, 2010

கோவா குண்டு வெடிப்பு - ஹிந்துத் தீவிரவாதிகள் கைது

http://www.hindu.com/2010/05/18/stories/2010051858590100.htm

இப்ப தான் ஹிந்துத் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக போர் புரிந்துள்ளார் என்று ஒத்து கொண்டுள்ளார்கள். மாலிகள் குண்டு வெடிப்பில் கூட கார்கரேவை போடடுத் தள்ளிய பின் ATS படையின் அவசர கதியில் அமர்த்தப்பட்ட ரகுவன்ஷி பிடிபட்ட ஹிந்துத் தீவிரவாதிகள் மீது ரொம்ப கஷ்டப்படடு இந்தியாவிற்கு எதிராக போர் புரிந்துள்ளார்கள் என்ற பிரிவை போடாமல் பார்த்துக் கொண்டார்.

11 of Hindu outfit chargesheeted
Prakash Kamat
PANAJI: The National Investigation Agency (NIA) probing the Margao blast on the eve of Diwali on October 16 last year, on Monday filed a charge sheet against 11 sadhaks (seekers) of the Goa-based right-wing Hindu outfit ‘Sanatan Sanstha.'

Two of them are dead, four under arrest, and five absconding. The charges include criminal conspiracy and waging war against the country.

Those chargesheeted before Sessions Judge U.V. Bakre include Malgonda Patil and Yogesh Naik. Both sadhaks of Sanatan, they were killed when an improvised explosive device (IED) they were allegedly carrying in their scooter compartment, went off accidentally. This took place at Margao, 35 km from here.

Another IED was defused by police the same night some time later at Sancoale, around 15 km away from the site of the first blast.

The charge sheet has also named ‘sadhaks' Vinay Talekar, Vinayak Patil, Dhananjay Ashtekar and Dilip Mangaonkar, all under arrest.

Prashant Juvekar (Maharashtra), Sarang Akolkar (Pune), Jayaprakash alias Anna, Rudra Patil (Sangli) and Prashant Ashtekar (Ratnagiri), are absconding.

The accused have been charged under Sections 120 (B), 121 (A), 122, 123, 427 of the Indian Penal Code read with 16, 17, 18, 23 of the Unlawful Activities (Prevention) Act and 3, 4 and 5 of the Explosive Substances Act.

பணத்திற்காக மதக்கலவரம் நடத்த தயார் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பேசிய வீடியோவை வெளியிட்டது தெஹல்கா

http://paalaivanathoothu.blogspot.com/2010/05/blog-post_8747.html

பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.



கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தாலிக்.

47 வயதான முத்தாலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர்.1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ் ல் இணைந்தார்.2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டு வெளியேறினார் முத்தலிக்.

பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார். பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசி அதன் மூலம் கலவரத்தை உருவாக்கியதில் இவருடைய அமைப்பும் ஒன்று.

இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா. இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தாலிக்.

இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.

பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தாலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்பப்பட்ட நிரூபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.

பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர். இதற்காக ரூ.60 லட்சம் செலவாகும் என்று முத்தாலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.

நம் இந்தியத் திருநாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்

1) 2010:- பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரி மாதுரி ஃகுப்தா

2) 2008:- இந்திய கடற்படை கமாண்டர் சுகிந்தர் சிங்

3) 2005 -2007:- சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மன்மோஹன் ஷர்மா (இவர் இந்திய உளவுத் துறையின் அதிகாரியும் கூட)

4) 2007 :- ஹாங்காங் இல் இந்திய உளவுத் துறை அதிகாரி ரவி நாயர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக பிடி பட்டார்.

5) 2009: இந்திய அரசாங்கத்தையே உலுக்கிய மற்றொரு உளவுத் துறை அதிகாரி ரபிந்தர் சிங். இவர் அமெரிக்க சிஐஏ வின் உளவாளியாக வேலை செய்து பிடிபட்ட போது, அமெரிக்காவுக்கு தப்பி ஓடி விட்டார்.

6) 2006:- இந்திய பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இந்திய உளவுத் துறை வில் ஒரு அதிகாரி அமெரிக்காவிற்கு வேலை பார்த்து வந்தார்.

7) 1990 களில் இஸ்லாமாபாத்தில் வேலை பார்த்த அதிகாரி இதே காரணத்திற்காக பிடிபட்டார். அதே காலங்களில் லண்டனில் அசோக் சாத்தே என்ற இந்திய அரசாங்க அதிகாரி மாட்டினார். ஈரானில் இருந்த இந்திய உளவுத் துறை அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தப் பட்ட சம்பவத்தில் இவரது பங்கு கண்டு பிடிக்கப் பட்டது.

8)80 களில் நேபாளத்தில் வேலை பார்த்து வந்த இந்திய அதிகாரி ஒருவர் பல ரகசியத் தகவல்களுடன் லண்டன் சென்று அங்கிருந்து மாயமாகி விட்டார். இவர் அமெரிக்க பெண் அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்தது காமெராவில் படமாகி இருந்தது.

9) உன்னி கிருஷ்ணன் என்ற இந்திய அதிகாரியை இலங்கை புலிகள் இயக்கம் LTTE உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக பிடிக்கப் பட்டார்.

Sunday, May 9, 2010

ஷொஹ்ராப்தீன் வழக்கு: சாட்சியைக் கொன்றது கைகளை பின்னால் கட்டிய நிலையில்- சி.ஐ.டியின் அதிர்ச்சி அறிக்கை

நன்றி் - http://paalaivanathoothu.blogspot.com/2010/05/blog-post_9263.html

அஹ்மதாபாத்:ஷொஹ்ராப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் நேரில் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியை சரியாக திட்டம் தீட்டி கைகளை பின்னால் கட்டிய நிலையில் கொலைச் செய்ததாக குஜராத் சி.ஐ.டி அதிர்ச்சிகரமான உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது.

சி.ஐ.டியின் க்ரைம் பிரிவு நேற்று முன்தினம் கைதுச்செய்த போலீஸ் கான்ஸ்டபிள்களான கரண் சிசோதியா, கிரண் சவுகான், காஞ்சி குச்சி ஆகியோரை விசாரணைச் செய்ததில் நரேந்திர மோடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இந்த உண்மை வெளிப்பட்டது.

குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிரஜாபதியைக் கொன்றது போலி என்கவுண்டர் மூலம் என்று கைதுச் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்கள் விசாரணை அதிகாரியான ஆர்.கே.பட்டேலிடம் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே கைதுச்செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளான வன்சாரா மற்றும் விபுல் அகர்வாலுக்கெதிரான மேலும் ஆதாரங்களாக அமைந்துள்ளன போலீஸ் கான்ஸ்டபிள்களின் வாக்குமூலங்கள்.

போலி என்கவுண்டர் நடக்கும் வேளையில் அகர்வால் பனஸ்கந்தா மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். எல்லை ரேஞ்ச் டி.ஐ.ஜியாக பணிபுரிந்திருந்த வன்சாரா அகர்வாலின் மேலதிகாரியாக இருந்தார்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டியா தங்களை ஒரு பட்ரோலிங் வாகனத்தில் பனஸ்கந்தாவில் சாப்ரி செக்போஸ்டில் கொண்டுவிட்டதாக கான்ஸ்டபிள்கள் தெரிவிக்கின்றனர். ராஜஸ்தானிலிருந்து 4 போலீஸ்காரர்களும் வந்திருந்தனர். ஒரு வெள்ளை நிற மாருதி 800 வருவதைக் கவனிக்கவேண்டும் என பாண்டியா ஹெட் கான்ஸ்டபிள்களிடம் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் கழிந்தபொழுது ஒரு நம்பர் பிளேட் இல்லாத மாருதிகார் அங்கு வந்தடைந்தது. அதிலிருந்து இறக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவர்தான் துளசிராம் பிரஜாபதியாவார். பின்னர் பிரஜாபதியை போலீஸ் ஜீப்பிற்கு அருகில் கொண்டு வந்தனர். பாண்டியா தனது கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கி மூலம் மாருதி காரை நோக்கி ஒரு முறை சுட்டார். பின்னர் தனது பணிக்கு பயன்படுத்தும் ரிவால்வரை எடுத்து பிரஜாபதியை நெருங்கி நின்றவாறு சுட்டார்.

தொடர்ந்து ராஜஸ்தான் போலீஸ்காரர்கள் இருவர் பிரஜாபதியை சுட்டனர்.பிரஜாபதி இறந்துவிட்டார் என உறுதிச் செய்த பின்னர் நாட்டுத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி தனது கையில் சுட்டுக் கொண்டனர். காரணம் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டது என்பதை காண்பிப்பதற்காக.

பின்னர் போலீஸ் பத்திரிகைகளுக்கு வழங்கிய கதை இதுவாகயிருந்தது: 'ராஜஸ்தான் போலீஸ் ஒரு வழக்குத் தொடர்பாக பிரஜாபதியை அஹ்மதாபாத்திற்கு கொண்டு வந்தனர். திரும்பிச்செல்லும் வழியில் பிரஜாபதியின் ஆட்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தி அவரை விடுவித்தனர். பின் தொடர்ந்து சென்ற குஜராத் போலீஸ் சத்திரபதி என்ற இடத்தில் வைத்து பிரஜாபதியை என்கவுண்டர் மோதலில் சுட்டுக் கொன்றனர்.' என்று.

இதற்கிடையே ஷொஹ்ராப்தீன் கொலையுடன் தொடர்புடைய சிறையிலடைக்கப்பட்டிருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்ட் என்.கெ.அமின், இன்ஸ்பெக்டர் வி.ராத்தோர் ஆகியோரை தங்கள் கஸ்டடியில் தருவதற்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இம்மனுவில் வருகிற 12 ஆம் தேதி முடிவு கூறப்படும். மேலும் சி.பி.ஐயின் புலனாய்வுக்குழு ஷொஹ்ராப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரை ஒரு பஸ்ஸிலிருந்து கடத்திச் சென்ற விபரங்களை சேகரிக்க ஆந்திரபிரதேசம் சென்றுள்ளது.

ஷொஹ்ராப்தீன் ஷேக் கொலையில் குஜராத் போலீசுடன் ஆந்திராவில் சில போலீஸ்காரர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப்போரின் உயிர்நாடி

நன்றி - சையது அலி, துபாய்.(Today Tippu sultan is very less remembered. Hence pls pass this article to as many people as you can. Any more data to this article is also appreciated.-by Blogspot owner)

1799 ஆம் மே மாதம் 4ஆம் தேதி சாதாரண சிப்பாய்போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர்தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத்திருமகனின் வரலாற்றை மே 4ஆம் தேதியாகிய இன்று நினைவு கூறுவது மிகவும் பொருத்தமாகும்
"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்'- இது தான் திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்தவேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹேரிஸ் இவ்வாறு கூறினான்: ’’இன்று முதல் இந்தியா நம்முடையது’’ என்று. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்புசுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக்குறிப்பிடுகிறார்.( The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி - ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத்தளபதியாக மாறினார்.


1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767 - 1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றியும் பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத்தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்தவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிரெஞ்சுப்படையினரையும் சேர்த்துக்கொண்டு ஆவேசத்துடன் போரைத்தொடர்ந்தார் திப்பு. ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்துக்கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்தவேண்டியதாயிற்று.1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச்செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டிவிடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு . எனவே அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான். இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணந்துக்கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்டபோதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக்குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில்,’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக்கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக்கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’.என்று குறிப்பிட்டான். போரின் துவக்கத்தில் வெற்றிப்பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக்கொண்டதால் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. அதன் பின்னரும் பதிலடிக்கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.


திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்குவழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்குவாங்கினர். இதனைக்குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத்தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான்,’இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்” என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குறிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்தபொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாதபோதிலும்
கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு. எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக்கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். ""அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்'' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். ""முட்டாள்... வாயை மூடு'' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! ""ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்'' என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது. எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக்கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப்பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணர்ந்தார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத்தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னாடியாக திகழ்ந்தார் அவர். முதன் முதலில் போர்களத்தில் ஏவுகனையை பயன்படுத்தியது திப்பு சுல்தான் தான். அவர் வீசிய ஏவுகனை ஆங்கிலேயனை புறமுதுகிட்டு ஓடச்செய்தது. டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ’நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார். இதனை இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோஸ் ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை,’இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக்கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை

திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்தநிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேறவேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத்திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச்செய்துவந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மதுவிற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்:”மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?’ என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச்சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார். அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு ’எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதியினரால் கீழ் ஜாதி பெண்கள் மீது பாலியல் ஆதிக்கம் செய்து வந்ததை முடிவுக்கு கொண்டுவந்தார். சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.
திப்புவின் மத நல்லிணக்கம்

திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக்கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம். திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத்தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது. இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ’திப்புவின் சமயக்கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். நஞ்சங்கோட்டில் உள்ள ஸ்ரீகண்டிஸ்வரா கோயிலில் இன்றும் திப்பு அளித்த கலசம் மற்றும் வைர கற்கள், நஞ்சங்கோட்டில் நஞ்சுந்டிஸ்வரா கோவிலுக்கு கொடுக்க்பட்ட பச்சை லிங்கம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதர் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளி கோப்பைகள் மற்றும் விளக்குகள், ஸ்ருங்கேரி சங்கராச்சாரியா மடத்திற்கு செய்த பொருள் உதவிகள், மெல்கோட்டே கோயிலில் உள்ள கலசங்கள், கலாலேயில் லகஷ்மிகாண்டே கோயில் வெள்ளி கோப்பைகள் திப்புவின் மதநல்லினக்க கொள்கைக்கு சான்றாக விளங்குகிறது.

திப்புவின் விவசாயக்கொள்கை

""எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்'' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப்பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். 1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத்துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல்நாட்டப்பட்ட கல்லைக்கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்'' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை

""தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.

இத்தகைய மாவீரனது பெயர் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையிலே கிடக்கிறது. அதனை நாம் உலகத்திற்கு உரக்க சொல்வோம்

Wednesday, May 5, 2010

பெரு நகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகை வீடு கொடுப்பதில்லை

இச்செய்தி சச்சார் கமிஷனும் பதிவு செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான மனநிலையை மாற்ற முஸ்லிம்கள் ஏதேனும் முயற்சி செய்வார்களா?

http://www.mumbaimirror.com/article/15/2010050320100503034248152d1a655bb/Bombay-Blue.html

Society bars Muslim husband from living in newly rented flat

Businessman Majid Khan and his wife Gayatri had barely moved into their newly rented flat in Chembur when they were asked to vacate the apartment because the housing society did not welcome Muslims. Majid was told to leave immediately and barred from stepping inside the building premises.

The couple had rented a flat on the first floor of Chembur's Venkatesh Sadan from May 1. They had signed the agreement, gone through police verification, and had even shifted their belongings. But on Saturday morning, just minutes before guests were to arrive for a house-warming party starting at 10 am, the flat owner Jyoti Rege called Majid to say that he would have to move out.

"At around 9.30, I was told that some locals had a problem with me being a Muslim," Majid told Mumbai Mirror. "I was categorically asked to hand over the keys so that my belongings could be shifted out immediately. I was told that I shouldn't enter the building again or I would be hurt."

Majid tried pleading with the landlord, saying he would explain his position to the society. However, he was told that he couldn’t meet any of the office-bearers. “When I realised that I would have to move out, I sought a few days’ time. They said I could move my belongings later without entering the premises, but I couldn’t stay in the building for even one more day,” said Majid.

When contacted, the owner of the house, Jyoti Rege, tried to skirt the issue. “I do not wish to give my house on rent anymore,” he said, declining to comment further. But Deepak Jagasia, the real estate agent, who had brokered the deal, confirmed that the owner had backed out after locals objected to a Muslim tenant in the building.

“He had no option than to back out,” Jagasia said. “Apart from returning the deposit and rent money, the owner and I have jointly offered to compensate Majid the Rs 21,000 that he had spent on shifting.”

Meanwhile, office-bearers of the society claimed that some locals had barged into the housing society on Friday night and threatened them with dire consequences if a Muslim was allowed to live there. V Ramnathan, the chairman of the building, said, “We were warned that no Muslims should live here. In any case, all the flat-owners here have decided not to allow him (Majid).”

When contacted, High Court advocate Amit Sale described the incicent as a “gross violation” of fundamental rights. “The constitution guarantees no discrimination on the basis of caste, creed, religion or sex

Sunday, May 2, 2010

மீண்டும் ஒரு போலி என்கவுண்டர் - அப்பாவி முஸ்லிமை சுட்டுக்கொன்ற அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் பொய் அம்பலம்

http://www.twocircles.net/2010may01/manipur_muslim_picked_killed_fake_encounter_assam_rifles.html இம்பால்:கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரைச் சார்ந்த அப்பாவியான ஃபஸீருத்தீன்(வயது 45) என்பவரை வீட்டிலிருந்து கடத்திச் சென்று பின்னர் கொடூரமாக சுட்டுக்கொன்று, தீவிரவாதி என பட்டம் சூட்டிய அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஜவான்களின் பொய் அம்பலமாகியுள்ளது. மணிப்பூரில் கடந்த சில வருடங்களாக அப்பாவிகளை சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுண்டர் என்று பொய் நாடகமாடும் அரசுப் படையினரின் வெறித்தனமான போக்கு தொடர்ந்து வருகிறது. ஃபஸீருத்தீன் அந்த அப்பாவிகளில் ஒருவராவார். கடந்த ஆண்டும் சாதரண நபர் ஒருவரை அரசு பாதுகாப்பு படை அநியாயமாக சுட்டு வீழ்த்தியதை டெஹல்கா புலனாய்வு இதழ் அம்பலப்படுத்தியது. 45 வயதான ஃபஸீருத்தீன் மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலிலுள்ள செக்கான் நகரில் உபயோகப்படுத்தப்பட்ட துணிகளை விற்கும் கடையை நடத்தி வந்தார். இவருக்கு மெம்சா என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டில் தூங்கப் போனார். அப்பொழுது சிலர் வீட்டுக் கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது. ஃபஸீருத்தீன் கதவை திறக்க செல்லும் முன்பே மாறுவேடத்தில் வந்திருந்த பாதுகாப்பு படையினர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் ஃபஸீருத்தீன் மற்றும் அவருடைய மனைவியின் கண்களை துணியால் கட்டினர். ஃபஸீருத்தீனின் மனைவி மெம்சாவின் வாயில் துணியை அமுக்கி கத்தாமலிருக்க செய்தனர். வீட்டின் அலமாரியை உடைத்து ஃபஸீருத்தீன் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயையும், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ஒரு மொபைல் ஃபோனையும் அபகரித்துவிட்டு ஃபஸீருத்தீனை வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர்தான் பாதுகாப்பு படையினரின் நாடகம் ஆரம்பித்தது. இரவு 11 மணியளவில் மீண்டும் திரும்பிவந்த பாதுகாப்பு படையினர் ஃபஸீருத்தீன் வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளனர். ஃபஸீருத்தீனின் மனைவி பயந்து போய் தனது 4 குழந்தைகளுடன் உறவினரின் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்துள்ளார். அப்பொழுது தனது வீட்டினுள் பல முறை துப்பாக்கியால் சுடும் சப்தத்தை கேட்டுள்ளார். மறுநாள் காலையில் மெம்சா தனது வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது தனது வீட்டு முற்றத்தில் இரத்தக்கறை படிந்துக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். சற்று தைரியத்தை வரவழைத்தவாறு மெம்சா அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் க்வாக்டா முகாமிற்கு சென்று தனது கணவரைப் பற்றி விசாரித்துள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் ஃபஸீருத்தீனை கைதுச் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர். ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை புரிந்துக் கொண்ட மெம்சா கிராமத் தலைவரான பிஸாக்கை அணுகியுள்ளார். அப்பொழுது உள்ளூர் போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஒரு போன்கால் வருகிறது. அதில் ஃபஸீருத்தீன் க்வாக்டா குமான் பகுதியில் வைத்து அஸ்ஸாம் 33 ரைஃபிள்ஸால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வருகிறது. பின்னர் ஃபஸீருத்தீனின் உடல் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடலில் 15 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்தன. மேலும் அவர் ஏற்கனவே அணிந்திருந்த ஆடையல்லாத போராட்டத்தின் போது அணியக்கூடிய ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய சொந்த ஆடையில் எந்தவித துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளமும் இல்லை. இதிலிருந்தே ஃபஸீருத்தீன் வேறொரு ஆடை அதாவது போராளிகளுக்கான ஆடை அணிவிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவாக விளங்கியது. ஆனால் மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபியோ ஃபஸீருத்தீனின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக வாக்குறுதியளித்து விட்டு கப்சிப்பாகி விட்டார். ஆனால் இந்த அநியாயமான கொடூர போலி என்கவுண்டர் கொலையைக் குறித்து விசாரணைக்கு அவர் உத்தரவிடவில்லை.

ஹெட்லி அமெரிக்க உளவாளிதான்: ஹெட்லியின் தாய்மாமன் பேட்டி

http://www.ndtv.com/news/world/headleys-uncle-to-ndtv-hes-part-armani-part-gilani-22117.php புதுடெல்லி:மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக குற்றஞ்சுமத்தப்படும் டேவிட் கோல்மென் ஹெட்லி அமெரிக்க உளவாளியாக செயல்பட்டவர் என அவருடைய தாய்மாமன் வில்லியம் ஹெட்லி என்.டி.விக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக ஹெட்லி ஒருபோதும் செயல்படவில்லை என வில்லியம் கூறுகிறார். அமெரிக்காவுக்காக உளவு அறிந்தாரா என்ற கேள்விக்கு வில்லியம் பதிலளிக்கையில், முன்பு ஹெட்லி அமெரிக்காவுக்காகத்தான் செயல்பட்டார் எனக்கூறினார். போதை மருந்து வழக்கில் கைதாகி சாதாரண சிறைத் தண்டனையை பெற்றபிறகு ஹெட்லி அமெரிக்காவுக்காக வேண்டி உளவு வேலைப்பார்ப்பதை நிறுத்தியதாக வில்லியம் தெரிவித்தார். உளவு வேலைகளை குறித்து ஹெட்லி விவாதிப்பார். ஆனால் எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறாவிட்டாலும், விமர்சனம் செய்வதுண்டு என்றும் வில்லியம் கூறுகிறார். கடந்த ஆண்டுதான் ஹெட்லியை அமெரிக்க புலனாய்வு ஏஜன்சியான எஃப்.பி.ஐ கைதுச் செய்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக விசாரணையின்போது தெரிவித்த ஹெட்லியை விசாரணைச் செய்ய இந்திய அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டது. அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் உள்ளிட்ட அமெரிக்க உயர் அதிகாரிகள் இதுத்தொடர்பாக வாக்குறுதியளித்த போதிலும், இந்திய அதிகாரிகள் ஹெட்லியை விசாரணைச் செய்வது தொடர்பாக இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஹெட்லி அமெரிக்க உளவாளியாக இருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பிறகும் அதற்கு உறுதிச் செய்யப்படாமல் இருந்தது. இந்த குற்றச்சாட்டு இந்திய பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோவைச் சார்ந்தவர்தான் ஹெட்லியின் தாயார். பாகிஸ்தானைச் சார்ந்தவரை திருமணம் செய்த அவர் பின்னர் அவரை விவாகரத்துச் செய்துவிட்டு அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்றார். தன்னுடன் தனது மகன் ஹெட்லியையும் அழைத்துச் சென்றார். அமெரிக்காவிற்கு செல்லும் வரை ஹெட்லி வளர்ந்தது பாகிஸ்தானில். குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஹெட்லியை முழுவதும் தளர்வடையச் செய்தது. அமெரிக்காகாரனாக இருக்கும்பொழுதே ஹெட்லி பாகிஸ்தானியாகவும் இருந்தார். அமெரிக்கர்கள் ஹெட்லியை பாகிஸ்தான் முஸ்லிமாக கருதினார்கள். பாகிஸ்தானிகளோ ஹெட்லியை அமெரிக்கக்காரனாக கருதினார்கள். இத்தகையதொரு எதிரெதிர் துருவங்களில் ஹெட்லியின் வாழ்க்கை அமைந்தது. இரண்டு உலகங்களில் ஹெட்லி ஒரே சமயத்தில் வாழ்க்கை நடத்தினார். இது அவரது இரட்டை குணத்திற்கு காரணமானது. அவரது தாயாருக்கும் பிரச்சனைகளிருந்தது. ஆனால் அவரிடம் அமெரிக்க கலாச்சாரம் ஆழமாக பதிந்திருந்தது. சொந்த விருப்பப்படி வாழும் பெண்மணியாக இருந்தார் அவர். மகனுக்கு 16 வயதாகும்பொழுது அவர் தனக்கு விருப்பமான ஆணைத் தேடத் துவங்கினார். இது ஹெட்லியின் வாழ்க்கையை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றியது. மதுபானக் கடைகளில் அவரது வாழ்க்கை கழிந்தது. அங்கு சில முஸ்லிம்களையும் அவர் கண்டார். தனிப்பட்ட வாழ்க்கையின் குழப்பங்கள் ஹெட்லியை இரட்டைக்குணம் கொண்டவராக மாற்றியது. அவர் ஒரே நேரத்தில் பாகிஸ்தானியாகவும், அமெரிக்கக்காரனாகவும் வாழ்ந்தார். மேற்கத்திய கலாச்சாரங்களுடன் டேவிட் ஹெட்லியாக வாழ்ந்தார். மீசையும், தாடியும் மழித்திருந்த ஹெட்லியின் கைகளில் எப்பொழுதும் மதுபான புட்டிகள் இருந்தன. தாவூத் கீலானி என்ற பெயரில் ஹெட்லி முஸ்லிமானார். நீண்ட தாடியுடனான முஸ்லிம் வேடத்துடன் நடந்த ஹெட்லியின் கைகளில் குர்ஆன் இருந்தது. ஆனால் அவர் ஒரு பப்பில்(Pub) (அதாவது ஆல்கஹால் விற்பனைச் செய்யும் வியாபார ஸ்தலம்) மானேஜராக வேலைப் பார்த்தார். இவ்வாறு பேட்டியளித்த ஹெட்லியின் தாய்மாமன் வில்லியம் தற்பொழுதும் தான் கடும் பாதுகாப்பிலிருக்கும் ஹெட்லியிடம் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். விசாரணையைக் குறித்து ஹெட்லி ஏதாவது தெரிவிப்பாரா என்ற கேள்விக்கு ’ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம் (we should expect many surprises) என்று ஹெட்லி கூறுவார் என வில்லியம் தெரிவித்தார்.

Blog Archive